குமுதம் ஜோதிடம் இதழில், ஏ.எம்.ஆர் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை, இதோ உங்களுக்காக!
இந்துக்கள் கபடமற்ற மனம் கொண்டவர்கள்! எவரையும் அவர்கள் சந்தேகக்கண் கொண்டு பார்ப்பதில்லை!! அவ்விதம்தான், கேரளக் கடற்கரையில் வந்திறங்கிய கிறிஸ்துவப் போர்த்துக்கீசியர்களை இந்துக்கள் அன்புடன் வரவேற்று, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
“அதிதி தேவோ பவ….” என்கிறது வேதம். வீட்டிற்கு வரும் அதிதிகள் - அதாவது, விருந்தினர்கள் - தெய்வத்திற்குச் சமம் என்று பொருள்.
இந்த வேத வாக்கியத்தை, இந்துக்கள் என்றும் மறந்ததில்லை. ஆதலால்தான், நம் நாட்டிற்கு `வியாபாரம்’ செய்ய வந்ததாகக் கூறிய போர்த்துக்கீசியரை வரவேற்று உபசரித்தனர் நம் மக்கள்!
ஆனால்! ஆனால்!! இத்தகைய கள்ளம், கபடமற்ற தூய அன்பிற்கு நமக்குக் கிடைத்த பரிசுகள்தான் என்ன?
சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டிப் பார்ப்போம்!
ஆயிரக்கணக்கான கோயில்கள் கிறிஸ்
துவப் போர்த்துக்கீசியர்களால் கொள்ளையடிக்கப்பட்டபின், தரைமட்டமாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான சிவாச்சாரியர்களும், பூசாரிகளும், பட்டாச்சாரியார்களும் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். நம் திருக்கோயில்கள் இருந்த இடங்களில் அவர்களது `சர்ச்சுகள்’ நிர்மாணிக்கப்பட்டன. மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர்.
போர்த்துக்கீசியர் காட்டிய வழியை, ஆங்கிலேயர்களும், பிற கிறிஸ்துவ நாட்டினரும், முகம்மதியர்களும் அதைவிடக் கொடூரமான முறைகளில், இந்து சமூகத்தினரையும், அதன் கலாச்சாரம், பண்புகள் ஆகியவற்றையும் அழித்தனர்.
சுதந்திரம் பெற்ற பின்பு..!
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பாவது இந்துக்களுக்குப் பாதுகாப்பு கிடைக்குமென எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே.
அன்பு காட்டிய நம்மிடம் இவ்விதம் சிறிதளவும் நன்றியுணர்வு இல்லாத கிறிஸ்தவ மதமாற்ற போதகர்களை, ஈராக், சிரியா, சௌதி அரேபியா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் எவ்விதம் நடத்துகின்றன என்பதை 28.12.2008 தேதியிட்ட `தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் அவர்கள் படித்துப் பார்க்கட்டும்! அந்தச் செய்தி இதோ:-
“ஈராக் நாட்டின் மோசூல் என்ற நகரிலிருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் வீடு, வாசல்களைத் துறந்து, தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களது வீடுகள் சூறையாடப்பட்டு பாதிரிமார்களும், உறவினர்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். காரணம் இவர்கள் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதே.
மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இந்துக்களை மதமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கிறிஸ்தவ மதபோதகர்கள் முஸ்லிம் நாடுகளில் அவர்கள் அழிக்கப்படுவதையும், பாரதத்தின் இந்துக்கள் காட்டிவரும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தாவது தங்கள் மதமாற்றச் செயல்களை நிறுத்திக்கொள்வார்களா? இந்துக்கள் காட்டிய அன்பிற்கு, இந்துக்களின் அன்பிற்குக் கிடைத்துவரும் பரிசுதான் மதமாற்றம் என்னும் ஏமாற்று வித்தையா?
நன்றி: குமுதம், ஏ.எம்.ஆர்